பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் கும்பல் : சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதேபோல, இணையதளங்களின் மூலம் நடைபெறும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதில், சமூகவிரோதிகள் பணம் பறிக்கும் செயலில் இளம் பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் சமூக விரோத கும்பல் ஒன்று, இளம்பெண்களை, கல்லூரி மாணவிகளை குறிவைத்து முகநூலில் நட்பாக பழகி, பிறகு காதல் வசப்படுத்தி, ஆபாச படம் எடுத்து வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். ஆனால், இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்கானது, சாதாரண வழக்காக உள்ளது. இதற்கு காரணம் பின்புலத்தில் அரசியல் தலையீடு உள்ளது என பொள்ளாச்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்த நிலையில், இன்று திருவள்ளுவர் திடலில் பொள்ளாச்சி அனைத்து கட்சி சமுதாய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், மாதர் சங்கங்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.



அதேபோல, வெளிப்படையான விசாரணை மூலம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...