கோவை : சுமார் 20 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிட தமிழர் கட்சி மனு அளித்துள்ளது.
கோவை : சுமார் 20 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிட தமிழர் கட்சி மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக திராவிட தமிழர் கட்சியின், மாவட்ட இளைஞரணி தலைவர் சு. மகேந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து காணவில்லை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையின் சட்டமீறலை ஆவணப் படமாக தயாரித்து வெளியிட்ட தோழர் காணாமல் போனது பல்வேறு விதமான அய்யபாடுகளை ஏற்படுத்துகிறது.

முகிலன் காணாமல் போனது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் முகிலன் வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தும், இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்களைக் காப்பற்ற ஜனநாயக முறையில் செயல்படும் முகிலனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திராவிட தமிழர் கட்சியின், மாவட்ட இளைஞரணி தலைவர் சு. மகேந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து காணவில்லை. தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையின் சட்டமீறலை ஆவணப் படமாக தயாரித்து வெளியிட்ட தோழர் காணாமல் போனது பல்வேறு விதமான அய்யபாடுகளை ஏற்படுத்துகிறது.

முகிலன் காணாமல் போனது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் முகிலன் வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தும், இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்களைக் காப்பற்ற ஜனநாயக முறையில் செயல்படும் முகிலனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
