அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் : திருப்பூர் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். 



விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :- கடந்த 2016-ம் ஆண்டு பிப்., மாதம் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 14 பேர் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இத்தகைய அரசு திட்டத்தை நிறைவேற்றிய நிலையில், திட்டத்திற்காக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து, நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இது குறித்து, வழக்கு தொடர்பான விவரங்களை திருப்பூர் ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் அளிக்கும்படி தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஒரு பிரத்யேக சந்திப்பை ஏற்பாடு செய்துகொள்ளலாம் என ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்தார், என்றார்.



மற்றொரு விவசாயி ராஜாமணி கூறியதாவது :- திருப்பூர், காங்கயத்தை அடுத்த முத்தூர் அருகே வட்டாரக்காடு காலனி பகுதியில் கொடுமுடி பிரதான ரோட்டின் அருகில் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலை அமைந்துள்ளது. இதன், அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த கல் உடைக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் கற் துகள்கள், காற்றில் பறக்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் ஏற்படும் சத்தத்தின் காரணமாக மாணவர்கள் படிக்க முடிவதில்லை, தூக்கமும் கெடுகிறது. இதனால், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை தடை செய்ய வேண்டும், என வலியுறுத்தினார்.

மற்றொரு விவசாயி மவுனகுருசாமி பேசியதாவது:-கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி பகுதியில் மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. உடுமலை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினை, பெரிய அளவில் உள்ளது. கோடை தொடங்கும் முன்னர் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...