நீலகிரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்த மாவட்ட ஆட்சியர்

நீலகிரி : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சரிபார்த்தார்.

நீலகிரி : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சரிபார்த்தார்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதில், நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை, கடந்த பிப்ரவரி 9-ம் தேதியன்று பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உதகை தமிழகம் ஆய்வு மாளிகையில் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இந்த நிலையில், நேற்று புதிதாக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சரிபார்த்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலுக்காக 684 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,699 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், 912 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து கட்சியினர் முன்பு சரிபார்க்கப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...