கோவை : சி.ஐ.ஐ. சார்பில் 4-வது தொழில்புரட்சியை மையமாகக் கொண்ட ‘18-வது கனெக்ட் கோவை’ மாநாடு இன்று நடைபெற்றது.
கோவை : சி.ஐ.ஐ. சார்பில் 4-வது தொழில்புரட்சியை மையமாகக் கொண்ட ‘18-வது கனெக்ட் கோவை’ மாநாடு இன்று நடைபெற்றது.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில், சி.ஐ.ஐ., சார்பில் 4-வது தொழில்புரட்சி, உங்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..? என்ற கருத்தை மையமாகக் கொண்டு, இந்த மாநாடு நடைபெற்றது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் காரணிகள் தொழிற்துறையில் ஏற்படுத்தப்படும் தாக்கம் என்பது பற்றியும் அலசப்பட்டது. மெஷின்களின் பயன்பாட்டுக் காலம், தயாரிப்பு, டிஜிட்டல் டுவின்ஸ், யுக்திகள், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆட்டோமேஷன் & டிஜிட்டல் மாற்றம் போன்றவற்றை குறித்து பல்வேறு செசன்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சாஃப்ட்வேர் பார்க்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த இயக்குநர் தேவேஷ் தியாகி பேசுகையில், “டிஜிட்டல் புரட்சி வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. ஐ.டி., துறையானது, நகரில் பெரும்பாலான வேலைவாய்ப்பை அளிக்கிறது, என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ., கோவை மண்டலத்தின் தலைவர் ஆர். வரதராஜன், இணை ஆலோசகர் செந்தில் ராமலிங்கம், டாடா கன்சல்டன்சி சர்வீசின் சென்னை பிராந்திய தலைவர் சுரேஷ் ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.