திருப்பூர் : திருப்பூரில் கோவில் திருவிழாவின் போது, தகராறில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் கோவில் திருவிழாவின் போது, தகராறில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருப்பூர் பத்மாவதிபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 15-ம் தேதி துவங்கியது. 19-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறின் காரணமாக, 20-ம் தேதி ஆளும்கட்சி பிரமுகர்கள், பெரியார் காலனியை சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட இருவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் பெண்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பெண்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அவிநாசி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர் பத்மாவதிபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 15-ம் தேதி துவங்கியது. 19-ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறின் காரணமாக, 20-ம் தேதி ஆளும்கட்சி பிரமுகர்கள், பெரியார் காலனியை சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட இருவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் பெண்களை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பெண்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அவிநாசி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
