கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பாய்ந்து சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு காரில் மோதும் பரபரப்பு சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பாய்ந்து சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு காரில் மோதும் பரபரப்பு சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர், நேற்று மதியம் அவரது சொகுசு காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் காரை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது. சூலூர் பிரிவு அருகே முதலிபாளையம் சந்திப்பில் கார் வந்த போது, நிஷாந்தின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்ற கார், எதிர்திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த காரை கோவையைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் நிஷாந்தின் கார் முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்ட பொதுமக்கள், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதியதோடு, நிஷாந்தின் கார் கவிழ்ந்து சுற்றும் பரபரப்பான, சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.