உக்கடம் மேம்பால பணிக்காக கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணிக்காக கரும்புக்கடை பகுதியில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86 வது வார்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.

கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணிக்காக கரும்புக்கடை பகுதியில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86 வது வார்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரிகள் (Town planning officers ) முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



இது குறித்து கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "42 கட்டிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதில் சில கட்டிடங்களின் முன்பகுதிகள் அகற்றப்பட்டன. அதே போல் 10 வீடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. அவர்களுக்கு ஏற்கனவே குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் முன் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடனே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன," என்றார்.



பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு ஜெ.சி.பி. வாகனங்கள், ஒரு டிராக்டர் பயண்படுத்தப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...