அ.தி.மு.க.,வுக்கு தான் இரட்டை இலை சின்னம் : டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., நிம்மதி

இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே சசிகலா ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லுபடியாகும் என்று கூறி டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...