கோவை : தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருப்பதாக கோவை இடதுசாரிகள் மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.
கோவை : தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருப்பதாக கோவை இடதுசாரிகள் மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது :- இந்தியா மதவெறி சக்திகளிடமும், கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அடகு வைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால், இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6,000 ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி, திராவிட ஆட்சி எது என்பதை காட்டியிருக்கின்றார் ராமதாஸ்.
இது பதவிக்காக, பணத்துக்காக இருக்கும் கூட்டணியல்ல. இது கொள்கையாளர்களின் கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணியில் அவர்களே சொல்லிவிட்டார்கள்.இது கொள்கை கூட்டணி அல்ல என்று. இது வெறும் சீட்டுக்கான தேர்தல் அல்ல.
எதிர்கால சந்ததிக்கு வாழ்வா..? சாவா..? ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இல்லையா..? என்பதற்காக தேர்தல். கொத்தடிமைகள் என்று கடுமையாக சொல்லிவிட்டார் என்று பார்க்காதீர்கள். அமித்ஷா சொல்வதை வாய்பொத்தி, கைகட்டி நின்று கேட்கின்றனர். கூட்டணிக்கு பெயர் வைக்க கூட உரிமை இல்லாத கூட்டணி கொத்தடிமை கூட்டணி இல்லாமல் வேறு என்ன..?. இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர். இதனால், தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது, எனக் கூறினார்.
அவர் பேசியதாவது :- இந்தியா மதவெறி சக்திகளிடமும், கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அடகு வைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால், இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6,000 ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி, திராவிட ஆட்சி எது என்பதை காட்டியிருக்கின்றார் ராமதாஸ்.
இது பதவிக்காக, பணத்துக்காக இருக்கும் கூட்டணியல்ல. இது கொள்கையாளர்களின் கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணியில் அவர்களே சொல்லிவிட்டார்கள்.இது கொள்கை கூட்டணி அல்ல என்று. இது வெறும் சீட்டுக்கான தேர்தல் அல்ல.
எதிர்கால சந்ததிக்கு வாழ்வா..? சாவா..? ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இல்லையா..? என்பதற்காக தேர்தல். கொத்தடிமைகள் என்று கடுமையாக சொல்லிவிட்டார் என்று பார்க்காதீர்கள். அமித்ஷா சொல்வதை வாய்பொத்தி, கைகட்டி நின்று கேட்கின்றனர். கூட்டணிக்கு பெயர் வைக்க கூட உரிமை இல்லாத கூட்டணி கொத்தடிமை கூட்டணி இல்லாமல் வேறு என்ன..?. இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர். இதனால், தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது, எனக் கூறினார்.