கோவை: இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை: இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அரசியல் எழுச்சி மாநாட்டில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது :- இந்திய இராணுவத்திற்கு இரு குணங்கள் உண்டு. பெருந்தன்மை, வீரம். இந்திய விமான படை வீரர்களுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிற்பியை போல கவனம் எடுத்து இந்த கொள்கை ரீதியான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இது பேரம் பேசும் கூட்டணி அல்ல. இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையிலும் நம்பிக்கை கொண்டவர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்வொம். எங்கள் மதத்தில் இருந்து கொண்டே ஆர்.எஸ்.எஸ். போல இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை இந்தியர்களாக பார்க்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் 6,000 ரூபாய் கொடுப்பது மாற்று அல்ல. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக விவசாய கடன்களை ஸ்டாலின் ரத்து செய்வார். இந்திய பொருளாதாரத்தை மோடி நாசம் செய்து இருக்கின்றார். ஜி.டி.பி குறைத்து போய் இருக்கின்றது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
விவிசாயகளின் வருவாயை இரட்டிப்பாக மாற்ற என்ன செயல் திட்டம் இருக்கின்றது மோடியிடம். இந்தியாவில் வளர்ச்சியை உருவாக்குவதுதான் இந்த கூட்டணியின் எண்ணம். சமூக நீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த மேடையில் இருக்க வேண்டும். ஆனால், வேறு ஏதோ காரணத்திற்காக பா.ம.க , பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்றது. பொதுவுடமை கட்சிகள் இருக்கும் இடத்தில் பா.ம.க. இருந்திருக்க வேண்டும். கொள்கைக்கு மாறான ஒரு கட்சி என்றால் அது பா.ம.க.. ஒரு அரசியல் கட்சி எப்படி இரண்டு பேரிடமும் பேச முடிகின்றது, எனக் கூறினார்.
அரசியல் எழுச்சி மாநாட்டில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது :- இந்திய இராணுவத்திற்கு இரு குணங்கள் உண்டு. பெருந்தன்மை, வீரம். இந்திய விமான படை வீரர்களுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிற்பியை போல கவனம் எடுத்து இந்த கொள்கை ரீதியான கூட்டணியை உருவாக்கியுள்ளார். இது பேரம் பேசும் கூட்டணி அல்ல. இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமையிலும் நம்பிக்கை கொண்டவர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்வொம். எங்கள் மதத்தில் இருந்து கொண்டே ஆர்.எஸ்.எஸ். போல இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை இந்தியர்களாக பார்க்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் 6,000 ரூபாய் கொடுப்பது மாற்று அல்ல. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக விவசாய கடன்களை ஸ்டாலின் ரத்து செய்வார். இந்திய பொருளாதாரத்தை மோடி நாசம் செய்து இருக்கின்றார். ஜி.டி.பி குறைத்து போய் இருக்கின்றது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
விவிசாயகளின் வருவாயை இரட்டிப்பாக மாற்ற என்ன செயல் திட்டம் இருக்கின்றது மோடியிடம். இந்தியாவில் வளர்ச்சியை உருவாக்குவதுதான் இந்த கூட்டணியின் எண்ணம். சமூக நீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த மேடையில் இருக்க வேண்டும். ஆனால், வேறு ஏதோ காரணத்திற்காக பா.ம.க , பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்றது. பொதுவுடமை கட்சிகள் இருக்கும் இடத்தில் பா.ம.க. இருந்திருக்க வேண்டும். கொள்கைக்கு மாறான ஒரு கட்சி என்றால் அது பா.ம.க.. ஒரு அரசியல் கட்சி எப்படி இரண்டு பேரிடமும் பேச முடிகின்றது, எனக் கூறினார்.