திருப்பூர் : சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைப்பேசி கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கருடம்புதூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் : சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைப்பேசி கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கருடம்புதூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கருடம்புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே கைப்பேசி கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால், கைப்பேசி கோபுரத்தின் ஒயர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளியின் மேற்கூரை வழியாக செல்வதால் உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இப்பகுதியில் இரண்டு கைப்பேசி கோபுரம் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
மேலும், 150 குடும்பங்களுக்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பகுதியில், சமுதாயக் கூடம் அமைத்து தரக்கோரி, பல மாதங்களாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சமுதாயக் கூடத்தை கட்டவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்டிப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கருடம்புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே கைப்பேசி கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால், கைப்பேசி கோபுரத்தின் ஒயர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளியின் மேற்கூரை வழியாக செல்வதால் உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இப்பகுதியில் இரண்டு கைப்பேசி கோபுரம் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
மேலும், 150 குடும்பங்களுக்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பகுதியில், சமுதாயக் கூடம் அமைத்து தரக்கோரி, பல மாதங்களாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சமுதாயக் கூடத்தை கட்டவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்டிப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.