நீலகிரி : முதுமலை வனப்பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : முதுமலை வனப்பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ எரிந்து வந்தது. இந்நிலையில், இந்த தீ நேற்றிரவு முதல் கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது, வனத்துறையினரால் வனப்பகுதிகளில், வைக்கப்பட்ட எதிர் தீ மட்டுமே தற்போது எரிந்து வருகிறது.

மேலும், முன்னெச்சரிக்கை கருதி 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வனப்பகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே, வனப்பகுதிக்குள் எரிந்துள்ள மரக்கட்டைகளில் இருந்து தீ பொறி பரவி, மீண்டும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்கிறது. மேலும், வனப்பகுதியில் பரவியிருந்த தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென, வனத்துறையால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ எரிந்து வந்தது. இந்நிலையில், இந்த தீ நேற்றிரவு முதல் கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது, வனத்துறையினரால் வனப்பகுதிகளில், வைக்கப்பட்ட எதிர் தீ மட்டுமே தற்போது எரிந்து வருகிறது.

மேலும், முன்னெச்சரிக்கை கருதி 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வனப்பகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே, வனப்பகுதிக்குள் எரிந்துள்ள மரக்கட்டைகளில் இருந்து தீ பொறி பரவி, மீண்டும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்கிறது. மேலும், வனப்பகுதியில் பரவியிருந்த தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென, வனத்துறையால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.