கோவை : சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், 6 ட்ராக்டர் இயந்திரங்களை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று வழங்கினார்.
கோவை : சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், 6 ட்ராக்டர் இயந்திரங்களை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று வழங்கினார்.
தமிழக அரசால் 2017-ம் ஆண்டு முதல் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களை உள்ளடக்கி மொத்தம் 37 குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில், இந்த ஆண்டு இணைக்கப்பட்டுள்ள 19 குழுக்களுக்கான உதவித் தொகை உழவர் குழுக்களுக்கு நேரடியாகவும், வேளாண் இயந்திரங்களுக்கான மானியங்களாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டையில் இயங்கி வரும் விவசாயிகளுக்கான 6 ட்ராக்டர் இயந்திரங்களை வழங்கும் விழா, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான நிதியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) முனைவர். டாம் பி சிலாஸ், வேளாண் உதவி இயக்குநர் ஷஃபி அஹமத், வேளாண் அலுவலர் சாம் ராவேல், வேளாண் அலுவலர் குருசாமி, வட்டார அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
