தனியார் பள்ளி கட்டிடத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை : உரிய விசாரணை கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : தனியார் பள்ளி கட்டிடத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : தனியார் பள்ளி கட்டிடத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ்யா என்ற மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர், கடந்த 9-ம் தேதி பள்ளியின் கணினி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படாமலும், பெற்றோரின் அனுமதியின்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 



இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், நவ்யவின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது, மற்றொரு மாணவியின் பையிலிருந்து கேக் எடுத்து சாப்பிட்டதாகவும், அதனை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே, மற்றொருவரிடம் விசாரித்ததில், மாணவியின் பையில் காதல் கடிதம் இருந்ததாகவும், அது தொடர்பாக விசாரித்ததில் மாணவி நவ்யா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும், முன்னுக்குப்பின் முரணாக பல்வேறு பதில்கள் கிடைத்தன. 

எனவே, மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் தனது மகளை கொலை செய்து விட்டதாகவும் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை முறையாக மேற்கொண்டு, மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...