கோவை : பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி வழங்கினார்.
கோவை : பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி வழங்கினார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த திட்டத்தினை தொடங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கோவிந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, இணை இயக்குநர் (வேளாண்மை) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியம், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது ;- சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டமே பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் நோக்கமே, சிறு, குறு விவசாயிகளின் வருவாய் ஆதாரத்தை ஊக்குவிப்பதே. இது விவசாயிகளின் இடுபொருள் செலவினத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில், வழங்கப்படும் கூடுதல் நிதி விவசாயிகளின் பயிர் மற்றும் மகசூலை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை உயர்த்தும்.
ஆகையால், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்நிதியானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதனுடைய முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதையடுத்து, கோவையில் 100 விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொகையானது அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் முதல் தவணை ரூ.2,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் முறையான ஆவணங்களைச் சமர்பித்து, தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக, வருகின்ற 1ம் மற்றும் 2ம் தேதிகளில் நிதி கொடுக்கப்படவுள்ளது. எனவே, விடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலரையோ, வேளாண்மை அலுவலகத்தினையோ அணுகி இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அவர் பேசினார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த திட்டத்தினை தொடங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி 100 விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கோவிந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, இணை இயக்குநர் (வேளாண்மை) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியம், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது ;- சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டமே பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் நோக்கமே, சிறு, குறு விவசாயிகளின் வருவாய் ஆதாரத்தை ஊக்குவிப்பதே. இது விவசாயிகளின் இடுபொருள் செலவினத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில், வழங்கப்படும் கூடுதல் நிதி விவசாயிகளின் பயிர் மற்றும் மகசூலை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை உயர்த்தும்.
ஆகையால், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்நிதியானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதனுடைய முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதையடுத்து, கோவையில் 100 விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொகையானது அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் முதல் தவணை ரூ.2,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் முறையான ஆவணங்களைச் சமர்பித்து, தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக, வருகின்ற 1ம் மற்றும் 2ம் தேதிகளில் நிதி கொடுக்கப்படவுள்ளது. எனவே, விடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலரையோ, வேளாண்மை அலுவலகத்தினையோ அணுகி இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அவர் பேசினார்.