கோவையிலிருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 2 பேர் படுகாயம்

நீலகிரி : நேற்று கோவையிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்திற்குள்ளானதில், இருவர் படுகாயம் மற்றும் மீதமுள்ளவர்களுக்கு லேசானே காயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : நேற்று கோவையிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்திற்குள்ளானதில், இருவர் படுகாயம் மற்றும் மீதமுள்ளவர்களுக்கு லேசானே காயம் ஏற்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்தில், தனியார் சூட்கேஷ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் 20 பேர், உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். கேளிக்கைகள் முடிந்து மாலை திரும்பிய போது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர் பகுதியில் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளது.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பேரில் முகமது அனாஸ் (16), மற்றும் சதாம் (27) ஆகியோருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மீதமுள்ளவர்கள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து, அனைவரும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், வேன் ஓட்டுநர் சரவணகுமாரிடம் நடைபெற்ற விசாரணையில், "சுற்றுலா வந்த அனைவரும் கோவையில் தங்கி பணிபுரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்," என தெரிய வந்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...