நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார்.
நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட காட்டு தீ, நள்ளிரவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வனப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் சாய்ந்து கிடக்கும் மரக் கட்டைகளில் பற்றியுள்ள நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதில் 90 % காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. சுமார் 150 வனத்துறையினர் தீயை முழுமையாக கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் முதுமலை வனப்பகுதியில் 5 இடங்களில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பாக, வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.