கோவையில் கோடைக்கு முன்னரே காட்டுத்தீ பரவியதால் பெரும் சேதங்கள் தவிர்ப்பு : வனத்துறையினர்

கோவை : கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

கோவை : கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார். 



இன்று அதிகாலை கர்நாடக மாநில எல்லையான பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, படிப்படியாகக் கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் பரவியது. மதுக்கரை மற்றும்போளுவாம்பட்டி ஆகிய வனச்சரக பகுதிகளில் மாலை காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, கோவைபுதூர் வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது அருகே உள்ள மதுக்கரை வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தீயினை அணைத்து வருகின்றனர். 

"எங்களது வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளை ஆராய்ந்து வருகின்றனர். கோடை காலத்திற்கு முன்னதாகவே காட்டுத் தீ பரவியுள்ளது," என்கின்றனர் வனத்துறை மூத்த அதிகாரிகள். 

அதேவேளையில், பந்திப்பூரில் இன்று அதிகாலை தொடங்கிய காட்டுத் தீ, தற்போது முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்கு சொந்தமான பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...