கோவை : சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் தானம் செய்யப்பட்டதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
கோவை : சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் தானம் செய்யப்பட்டதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
ஈரோடு மாவட்டம் ஊசிபாளையத்தில் கே.சண்முகம் (55) என்பவர் மனைவி பார்வதி மற்றும் மகன் லோகேஷுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி இரவு 10.45 மணியளவில் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அரச்சலூர் அருகில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி பார்வதி, மகன் லோகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சண்முகத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால். அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய கே. சண்முகம் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
ஈரோடு மாவட்டம் ஊசிபாளையத்தில் கே.சண்முகம் (55) என்பவர் மனைவி பார்வதி மற்றும் மகன் லோகேஷுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி இரவு 10.45 மணியளவில் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அரச்சலூர் அருகில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி பார்வதி, மகன் லோகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சண்முகத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால். அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய கே. சண்முகம் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.