திருப்பூரில் திருநங்கைகளைத் தாக்கிய போலீசாருக்கு கண்டனம் : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த திருநங்கைகள்

திருப்பூர் : நேற்றிரவு திருநங்கைகளை போலீசார் தாக்கியதைக் கண்டித்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் மனு அளித்தனர். அதனை போலீசார் ஏற்காததால் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : நேற்றிரவு திருநங்கைகளை போலீசார் தாக்கியதைக் கண்டித்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் மனு அளித்தனர். அதனை போலீசார் ஏற்காததால் சாலைமறியலில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மாநகர பகுதியில் 114 திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு நெரப்பரிச்சல் பகுதியில் அரசின் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு தொழிற்பயிற்சி பெற்று, தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வரும் திருநங்கை நாகலட்சுமி(21), மற்றும் அவருடன் சிவகாமி (27), என்ற மற்றொரு திருநங்கை என இருவரும் பணி முடிந்து நேற்றிரவு ப்ரிட்ஜ்வே காலனி பகுதி வழியாக நடந்து வந்துள்ளனர். 



அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இரு திருநங்கைகளையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் மனு அளித்தனர். 



ஆனால், போலீசார் திருநங்கைகளின் புகார் மனுவை ஏற்க மறுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கைகள் காவல் நிலையம் முன்பாக குமரன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திருநங்கைகளை சமாதானப்படுத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...