திருப்பூர் : கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அழைப்பாணை பெற்றவர்களுக்கு முறையான அறிவிப்பு தராமல் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் : கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அழைப்பாணை பெற்றவர்களுக்கு முறையான அறிவிப்பு தராமல் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மனையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதற்கிடையில், நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அழைப்பாணை பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மனையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதற்கிடையில், நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அழைப்பாணை பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.