திருப்பூர் : திருப்பூரில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அன்று இரவு சுமார் 11 மணி அளவில் காந்திநகர் செட்டியார் திருமண மண்டபத்திற்கு எதிரில் நண்பர்கள் இருவருக்கிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அதிசூரன் என்பவரை, திருப்பதி என்பவர் இரும்பு கட்டையால் தாக்கியுள்ளார். அதில், அதிசூரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறை திருப்பதியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் நீதிபதி முகமதுவின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் குற்றவாளி திருப்பதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும். ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, குற்றவாளி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அன்று இரவு சுமார் 11 மணி அளவில் காந்திநகர் செட்டியார் திருமண மண்டபத்திற்கு எதிரில் நண்பர்கள் இருவருக்கிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அதிசூரன் என்பவரை, திருப்பதி என்பவர் இரும்பு கட்டையால் தாக்கியுள்ளார். அதில், அதிசூரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறை திருப்பதியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் நீதிபதி முகமதுவின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் குற்றவாளி திருப்பதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும். ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, குற்றவாளி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
