கோவை : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் நள்ளிரவில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர் நள்ளிரவில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், மார்ச்,1, 2, 3 ஆகிய தேதிகளில் ஆத்துப்பாலத்தில் 'அமைதியை நோக்கி' என்ற பொதுக்கூட்டத்தின் பேனர்களும் காவல்துறையின் அனுமதியோடு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பேனர்களையும், போஸ்டர்களையும் கிழித்ததாக மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை போலீசார் கிழித்தது வேதனைக்குரிய செயலாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு ஆத்துப்பாலம் அருகே போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் அந்த பகுதியில் குவிந்தனர். இந்நிலையில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
திடீரென ஆத்துப்பாலம் பகுதியில் காவல்துறையைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நள்ளிரவில் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், மார்ச்,1, 2, 3 ஆகிய தேதிகளில் ஆத்துப்பாலத்தில் 'அமைதியை நோக்கி' என்ற பொதுக்கூட்டத்தின் பேனர்களும் காவல்துறையின் அனுமதியோடு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பேனர்களையும், போஸ்டர்களையும் கிழித்ததாக மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை போலீசார் கிழித்தது வேதனைக்குரிய செயலாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு ஆத்துப்பாலம் அருகே போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் அந்த பகுதியில் குவிந்தனர். இந்நிலையில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.
திடீரென ஆத்துப்பாலம் பகுதியில் காவல்துறையைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நள்ளிரவில் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.