2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு : மருத்துவத்துறையே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை : கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், மருத்துவத் துறையே பொறுப்பேற்க வேண்டுமென எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், மருத்துவத் துறையே பொறுப்பேற்க வேண்டுமென எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இரண்டு வயது குழந்தைக்கு ஹெச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கத்தின் தலைவர் மீனாட்சி, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது :- பெற்றோர்களால் குழந்தைக்கு எச்.ஐ.வி. வரவில்லை. பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை. இரத்தம் அல்லது ஊசி மூலமாக பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, மருத்துவம் சார்ந்த துறை மூலமாகவே எச்.ஐ.வி. இக்குழந்தைக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கு மருத்துவத் துறையே பொறுப்பேற்க வேண்டும். மேலும், அக்குழந்தைக்கு மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகளை அரசு செய்ய வேண்டும். எப்படி எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தி, நல்ல தீர்வை தர வேண்டும், என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...