மேற்கு தொடர்சி மலையினை காக்க தனி சட்டம் இயற்றுவது அவசியம் : சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கோவை : சட்டத்தால் மட்டுமே, மேற்கு தொடர்சி மலையினை காக்க முடியும், ஆகவே, தனி சட்டம் இயற்றுவது அவசியம் என வலிறுத்துகின்றனர், சூழலியல் ஆர்வலர்கள்.

கோவை : சட்டத்தால் மட்டுமே, மேற்கு தொடர்சி மலையினை காக்க முடியும், ஆகவே, தனி சட்டம் இயற்றுவது அவசியம் என வலிறுத்துகின்றனர், சூழலியல் ஆர்வலர்கள். 

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது ;- மேற்கு தொடர்ச்சி மலையை காக்க, தனி சட்டம் இயற்றுவது குறித்து வலியுறுத்த வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பிரச்சினைகள், மற்ற மாநிலங்களைப் போன்றதல்ல. 

மிக சிறந்த நீர் ஆதாரமான மேற்கு தொடர்ச்சி மலையை, மத்திய மாநில அரசுகள் நினைத்தால் சுலபமாக பாதுகாக்க முடியும். இது சிறந்த உயிர்சூழல் மையம். குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளின் புல்வெளிதான், தண்ணீர்த் தொட்டி போன்று செயல்படுகின்றன. 



இதனுள், தேங்கி இருக்கும் நீர் பாறையிடுக்குகள் வழியாக, பாய்ந்து நன்னீர் ஆதாரத்தினை உருவாக்குகின்றன. ஆகவே, வெறுமனே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு என்றில்லாமல், அதனுடன் தொடர்புடைய நதிகளையும் பாதுகாக்கும் முயற்சிகளை முன் எடுக்க வேண்டும். அங்குள்ள, வேறெங்கும் காணமுடியாத மரங்கள், செடிகள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும். இதனை, சட்டத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். 

இதற்காவே, கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சூழலியல் திருவிழாவில், அனைத்து அமைப்புகளும் இணைந்து, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கோரிக்கையை வரும் தேர்தலில் வலியுறுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.

மேலும், மலை, அதனை சுற்றியுள்ள இயற்கை அமைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விவகாரங்களுக்காகவே, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதில், இதற்கான தீர்வுகளை பற்றி கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளோம், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...