புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு உதகையில் வழக்கறிஞர்கள் சார்பில் மவுன அஞ்சலி

நீலகிரி : ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதகை வழக்கறிஞர்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

நீலகிரி : ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதகை வழக்கறிஞர்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 



காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உதகை வழக்கறிஞர்கள் சார்பில் உதகை ஏ.டி.சி. திடல் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 

அப்போது, நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் எனவும், நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைளை கையில் ஏந்தி சென்றனர். இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க பாரத பிரதமருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...