நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேதிப்பொருளை நிரப்பும் பணியின் போது, ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நீலகிரி : அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேதிப்பொருளை நிரப்பும் பணியின் போது, ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்களில் புரபலெண்ட் என்ற வேதிப்பொருள் நிரப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வேதிப் பொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதாபன் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதையறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மயக்க நிலையில் இருந்த பிரதாபனை மீட்டனர். பின்னர் வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிசைக்காக அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கசிவு கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்களில் புரபலெண்ட் என்ற வேதிப்பொருள் நிரப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வேதிப் பொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதாபன் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதையறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மயக்க நிலையில் இருந்த பிரதாபனை மீட்டனர். பின்னர் வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிசைக்காக அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கசிவு கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
