கோவை : கோவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவையில் முன்னதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஹரிஹரன், நகர்புற மேம்பாடு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவராக நியமனம் செய்யபட்டதை தொடர்ந்து, கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி, இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில், "எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைகளை சமாளிக்க அதற்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாதத்தில் ஒரு நாள் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும், சிறப்பாக செயல்பட மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எனது பணி இருக்கும். மக்கள் குறை தீர்ப்பு நாட்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்குள் பரிசீலிக்கபட்டு, 15 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
மேலும், கோவை மாவட்டத்தில் நடைபெறும் மலக்குழி மரணங்கள் குறித்த கேள்விக்கு, " மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.