திருப்பூர் : தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து வஞ்சித்த பாஜகவோடு, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து வஞ்சித்த பாஜகவோடு, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் புதிய அரசு பேருந்துகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. அதில், கலந்துகொள்ள வந்த அதிமுகவின் தோழமை கட்சி, கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது ;- அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவினர் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் வஞ்சகம் செய்துவந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கக்கூடாது என கொங்கு இளைஞர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு யாருக்கு என தெரிவிக்க இருக்கிறோம். மீண்டும் மோடி பிரதமராக முடியாது என்பதை உணர்ந்தே நடிகர் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை என்ற வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஈ.பி.எஸ், ஓபிஎஸ் அணிகள் சசிகலா, டிடிவி அணிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கவேண்டும் என சுப்பிரமணியசாமி சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். எங்கள் விருப்பமும் அதுவே. இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூரில் புதிய அரசு பேருந்துகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. அதில், கலந்துகொள்ள வந்த அதிமுகவின் தோழமை கட்சி, கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது ;- அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவினர் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் வஞ்சகம் செய்துவந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கக்கூடாது என கொங்கு இளைஞர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு யாருக்கு என தெரிவிக்க இருக்கிறோம். மீண்டும் மோடி பிரதமராக முடியாது என்பதை உணர்ந்தே நடிகர் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை என்ற வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஈ.பி.எஸ், ஓபிஎஸ் அணிகள் சசிகலா, டிடிவி அணிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கவேண்டும் என சுப்பிரமணியசாமி சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். எங்கள் விருப்பமும் அதுவே. இவ்வாறு அவர் பேசினார்.