கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படை வீரர்கள் தாக்குதலால் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர், தேசிய கொடியேந்தி வீரவணக்க மரியாதை செலுத்தினர்.
கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படை வீரர்கள் தாக்குதலால் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர், தேசிய கொடியேந்தி வீரவணக்க மரியாதை செலுத்தினர்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், துணை ரானுவப்படையினை சேர்ந்த நாற்பது சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் சிவச்சந்திரன் என இரு வீரர்களும் அடங்குவர்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை, பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இறந்த வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெண்கள் உள்ளிட்ட பலரும் கைகளில் தேசியக்கொடியினை ஏந்தியபடி பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைகளில் தீபம் ஏந்தி, மலர் தூவி மரணமடைந்த வீர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், நம் வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தினர்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், துணை ரானுவப்படையினை சேர்ந்த நாற்பது சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் சிவச்சந்திரன் என இரு வீரர்களும் அடங்குவர்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை, பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இறந்த வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெண்கள் உள்ளிட்ட பலரும் கைகளில் தேசியக்கொடியினை ஏந்தியபடி பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைகளில் தீபம் ஏந்தி, மலர் தூவி மரணமடைந்த வீர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், நம் வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தினர்.