பிரிக்கால் விவகாரம் : ஊழியர்கள் பணி நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிக்கால் நிறுவனம் செயல்படுகிறது. 1,600 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 294 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆக., 21, முதல் வேலை நிறுத்தம் செய்தனர். 100 நாட்களுக்குப் பின் பணிக்கு வந்தவர்களுக்கு, இதே நிறுவனத்தின் பிற தொழிற்சாலைகளுக்கு, பணி மாறுதல் வழங்கப்பட்டது. அவர்கள் இதை ஏற்க மறுத்தனர். 

ஆகையால், பிரிக்கால் நிறுவனம் பணிக்கு வராத 294 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து பிரிக்கால் நிறுவன தரப்பில், வரும் பிப்., 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, பிரிக்கால் நிறுவனம் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யும், எனக் கூறப்பட்டது. 

"நீதிமன்ற உத்தரவு பிப்.,27 வரை இருக்கும் காரணத்தால் நிறுவனம் ஊழியர்களுக்கு அதுவரை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், இது போன்ற பணி நீக்க முடிவுகளை எடுக்க முடியாது. நாங்கள் பிப்.,27 வரை, நீதிமன்றத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்," என்றார் குமாரசாமி, தேசிய தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...