கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிக்கால் நிறுவனம் செயல்படுகிறது. 1,600 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 294 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆக., 21, முதல் வேலை நிறுத்தம் செய்தனர். 100 நாட்களுக்குப் பின் பணிக்கு வந்தவர்களுக்கு, இதே நிறுவனத்தின் பிற தொழிற்சாலைகளுக்கு, பணி மாறுதல் வழங்கப்பட்டது. அவர்கள் இதை ஏற்க மறுத்தனர்.
ஆகையால், பிரிக்கால் நிறுவனம் பணிக்கு வராத 294 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரிக்கால் நிறுவன தரப்பில், வரும் பிப்., 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, பிரிக்கால் நிறுவனம் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யும், எனக் கூறப்பட்டது.
"நீதிமன்ற உத்தரவு பிப்.,27 வரை இருக்கும் காரணத்தால் நிறுவனம் ஊழியர்களுக்கு அதுவரை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், இது போன்ற பணி நீக்க முடிவுகளை எடுக்க முடியாது. நாங்கள் பிப்.,27 வரை, நீதிமன்றத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்," என்றார் குமாரசாமி, தேசிய தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிக்கால் நிறுவனம் செயல்படுகிறது. 1,600 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 294 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆக., 21, முதல் வேலை நிறுத்தம் செய்தனர். 100 நாட்களுக்குப் பின் பணிக்கு வந்தவர்களுக்கு, இதே நிறுவனத்தின் பிற தொழிற்சாலைகளுக்கு, பணி மாறுதல் வழங்கப்பட்டது. அவர்கள் இதை ஏற்க மறுத்தனர்.
ஆகையால், பிரிக்கால் நிறுவனம் பணிக்கு வராத 294 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரிக்கால் நிறுவன தரப்பில், வரும் பிப்., 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, பிரிக்கால் நிறுவனம் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யும், எனக் கூறப்பட்டது.
"நீதிமன்ற உத்தரவு பிப்.,27 வரை இருக்கும் காரணத்தால் நிறுவனம் ஊழியர்களுக்கு அதுவரை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், இது போன்ற பணி நீக்க முடிவுகளை எடுக்க முடியாது. நாங்கள் பிப்.,27 வரை, நீதிமன்றத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்," என்றார் குமாரசாமி, தேசிய தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம்.