கோவை : கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென சோதனை மேற்கொண்டதில், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை : கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென சோதனை மேற்கொண்டதில், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் உத்தரவின் பேரில், வண்டி எண் 12680 கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலம்-ஜோலார்பேட்டை இடையே வணிக பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மேற்பார்வையில், 7 டிக்கெட் பரிசோதகர்கள், 2 ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் பயணிகளின், பயணச்சீட்டுகளை சோதனை செய்தனர். இதையடுத்து, 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், ரயிலில் உள்ள உணவகத்தில் உணவின் தரம், உணவு சமைக்கும் இடம், சமையல் பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயணிகளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார்களைத் தெரிவிக்க 138 என்ற உதவி எண், ரயில்வே தொடர்பான விவரங்களுக்கு 139 என்ற உதவி எண் ஆகியவற்றைத் தொடர்பு கொள்வது குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் கூறுகையில், "ரயில்களில் திடீர் சோதனை மேற்கொண்டு பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, ரயில் பெட்டியில் உள்ள உணவகத்தின் தரம் மற்றும் பயணிகளின் தேவையான வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்," என்றார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் உத்தரவின் பேரில், வண்டி எண் 12680 கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலம்-ஜோலார்பேட்டை இடையே வணிக பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மேற்பார்வையில், 7 டிக்கெட் பரிசோதகர்கள், 2 ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் பயணிகளின், பயணச்சீட்டுகளை சோதனை செய்தனர். இதையடுத்து, 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், ரயிலில் உள்ள உணவகத்தில் உணவின் தரம், உணவு சமைக்கும் இடம், சமையல் பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயணிகளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார்களைத் தெரிவிக்க 138 என்ற உதவி எண், ரயில்வே தொடர்பான விவரங்களுக்கு 139 என்ற உதவி எண் ஆகியவற்றைத் தொடர்பு கொள்வது குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் கூறுகையில், "ரயில்களில் திடீர் சோதனை மேற்கொண்டு பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, ரயில் பெட்டியில் உள்ள உணவகத்தின் தரம் மற்றும் பயணிகளின் தேவையான வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்," என்றார்.