கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிரே வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது. இந்த தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். தன்னலமில்லாத ராணுவ வீரர்களின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியும், கண்டன போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை, ரேஸ் கோர்ஸ் சி.எஸ்.ஐ சர்ச்சின் முன்பாக, ஜமாத் ஈ இஸ்லாமி ஹிந்த், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த ஜமாத், சிறுதுளி உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து, நாட்டுக்காக தன்னுயிர் துறந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தவுள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் மெழுகுதிரிகளை எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.