18-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் ௩ நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.

கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.



3-வது ஊதிய உடன்பாடு, பென்சன் மாற்றம், 4ஜி அலைகற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வேகப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்,என்.எல் ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரயில் நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்து பந்தய சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.



பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதனை மேம்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெருமளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைவான கடனில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடனை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற அரசாங்கம் தடை விதித்து உள்ளது.



நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டாலே கடன் சுமை குறையும். இதற்கான முன்மொழிவை அனுப்பி பல மாதங்களாகியும், ஒப்புதல் தராமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், இதுவரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...