கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் ௩ நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.
கோவை : பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெரிவித்தனர்.

3-வது ஊதிய உடன்பாடு, பென்சன் மாற்றம், 4ஜி அலைகற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வேகப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்,என்.எல் ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரயில் நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்து பந்தய சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதனை மேம்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெருமளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைவான கடனில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடனை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற அரசாங்கம் தடை விதித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டாலே கடன் சுமை குறையும். இதற்கான முன்மொழிவை அனுப்பி பல மாதங்களாகியும், ஒப்புதல் தராமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், இதுவரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், எனத் தெரிவித்தனர்.

3-வது ஊதிய உடன்பாடு, பென்சன் மாற்றம், 4ஜி அலைகற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வேகப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்,என்.எல் ஊழியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரயில் நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்து பந்தய சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதனை மேம்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெருமளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறைவான கடனில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடனை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற அரசாங்கம் தடை விதித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டாலே கடன் சுமை குறையும். இதற்கான முன்மொழிவை அனுப்பி பல மாதங்களாகியும், ஒப்புதல் தராமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், இதுவரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், எனத் தெரிவித்தனர்.