கோவை குண்டு வெடிப்பு சம்பவம் : உயிரிழந்தவர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் மவுன அஞ்சலி

கோவை : கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் மலர் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

கோவை : கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் மலர் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். 



கோவை மாவட்டத்தில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாஜக துணைத்தலைவர் அத்வானி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். 

அப்போது, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாஜக இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தனர். இதில், தீவிரவாதிகளின் சதி செயல் காரணமாக குண்டு வெடித்தது. இதனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி வேடிக்கைப் பார்க்க சென்ற சிறு குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழக்க நேரிட்டது. 

மேலும், இந்த குண்டு வெடிப்பில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையொட்டி, ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்களுடன் இணைந்து மேட்டுப்பாளையம் பாஜகவினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 

இந்நிலையில், குண்டு வெடிப்பு நடந்த தினமான இன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...