கோட நாடு விவகாரம் : சயான், மனோஜூக்கு லுக் அவுட் நோட்டீஸ்

நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்று விடாமலிருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார்.

நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்று விடாமலிருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார். 

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

மேலும், மீதமுள்ள சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டும் இம்மாதம் 8ம் தேதி ஆஜராயினர். பிஜின், திபு, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்களின் ஜாமீனை உதகை நீதி மன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, பிஜின், திபு ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கு விவகாரத்தினால், சாயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவாக இருக்கின்றனர். ஆகையால், இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...