கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் : நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

கோவை : ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, கல்லூரியின் பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, கல்லூரியின் பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாலக்காடு சாலையில் உள்ள க.க.சாவடி அருகே இருக்கும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக, இக்கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகமாகப் படிக்கின்றனர். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது மாணவிகளிடம் பாலியல் ரீதியாகப் பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் இருந்து வருகிறது. இதுதொடர்பாக, மாணவ மாணவிகள் பலமுறை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் இதுவரை பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால், மாணவ, மாணவிகள் இன்று கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...