கோவையில் ம.தி.மு.க கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்

கோவை : கவுண்டம்பாளையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கவுண்டம்பாளையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



கோவை, கவுண்டம்பாளையம் ஜி.என். மில்ஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளது. இதில், ம.தி.மு.கவின் கொடிக்கம்பமும் உள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு இந்த கொடிக்கம்பத்தை மர்மநபர்கள் வெட்டி சாய்த்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த மதிமுக நிர்வாகிகள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சம்பத் இந்த புகாரை அளித்துள்ளார். மேலும், இந்த புகாரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் மதிமுகவின் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்திருப்பார்கள் என சந்தேகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக, துடியலூர் போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சோதனை செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூர் வந்தபோது மதிமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், தற்போது மதிமுகவின் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது பாஜகவினர் மற்றும் ஹிந்து அமைப்புகள் மீது சந்தேகங்களை எழுப்புவதாக இருக்கிறது என மதிமுகவினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...