கோவை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்களித்த விபரத்தினை சரிபார்க்கும் கருவி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் (பொ) துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று முதல் 5 நாட்களுக்கு, ஒரு தொகுதிக்கு 6 அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 60 பிரச்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.