நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஓழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஓழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி ஆய்வாளர் கீதாலட்சுமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தியது. அப்போது, ஆவண காப்பாளர் நந்தகுமாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 29,000-த்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பணியில் உள்ள 29 ஊழியர்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆடிட்டருக்கு தருவதற்காக தலா ஒருவரிடம் ஆயிரம் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்குண்டான பெயர் பட்டியலையும் அதிகாரிகளிடம் வழங்கியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணைக்குப் பின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த திடீர் சோதனை காரணமாக அரசு லாலி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஓழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஓழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி ஆய்வாளர் கீதாலட்சுமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தியது. அப்போது, ஆவண காப்பாளர் நந்தகுமாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 29,000-த்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பணியில் உள்ள 29 ஊழியர்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆடிட்டருக்கு தருவதற்காக தலா ஒருவரிடம் ஆயிரம் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்குண்டான பெயர் பட்டியலையும் அதிகாரிகளிடம் வழங்கியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணைக்குப் பின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த திடீர் சோதனை காரணமாக அரசு லாலி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.