நீலகிரி : நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை, சீகூர் போன்ற பகுதிகளில் உள்ள வனங்களில் புற்கள் கருகி வருகிறது. இந்நிலையில், யானைகள் முதலிய வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. எனவே, வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்களை நியமிப்பது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் தண்ணீருக்காக வெளியில் வராமல் இருக்க இங்குள்ள வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இருமாதங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளதாலும், மனித - விலங்கு மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் இது போன்ற தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வறட்சி காலம் முடியும் வரை இந்த தண்ணீர் நிரப்பும் பணி தொடரும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை, சீகூர் போன்ற பகுதிகளில் உள்ள வனங்களில் புற்கள் கருகி வருகிறது. இந்நிலையில், யானைகள் முதலிய வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. எனவே, வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்களை நியமிப்பது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் தண்ணீருக்காக வெளியில் வராமல் இருக்க இங்குள்ள வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இருமாதங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளதாலும், மனித - விலங்கு மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் இது போன்ற தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வறட்சி காலம் முடியும் வரை இந்த தண்ணீர் நிரப்பும் பணி தொடரும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.