நீலகிரி : உதகையில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகள் மீறியும் கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கும், கட்டடங்களுக்கும் சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
நீலகிரி : உதகையில் உரிய அனுமதியின்றியும், விதிமுறைகள் மீறியும் கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கும், கட்டடங்களுக்கும் சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உரிய அனுமதியின்றி விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.
மேலும், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வந்தனர். ஆனாலும், நோட்டீஸ் பெற்ற சில உரிமையாளர்கள் கட்டடங்கள் கட்டுமானப் பணியை நிறுத்தியும், சிலர் நோட்டீஸிற்கு பதிலளிக்காமலும், இன்னும் சிலர் கட்டுமானப்பணிகளை தொடர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று விதிமுறை மீறிய வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக உரிய அனுமதி பெறாத கட்டட உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உரிய அனுமதியின்றி விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.
மேலும், அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வந்தனர். ஆனாலும், நோட்டீஸ் பெற்ற சில உரிமையாளர்கள் கட்டடங்கள் கட்டுமானப் பணியை நிறுத்தியும், சிலர் நோட்டீஸிற்கு பதிலளிக்காமலும், இன்னும் சிலர் கட்டுமானப்பணிகளை தொடர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று விதிமுறை மீறிய வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக உரிய அனுமதி பெறாத கட்டட உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.