20 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை குடியிருப்புப் பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்

நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரிமுடக்கு கிராமங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலா வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


நீலகிரி : உதகை அருகே கெந்தொரை, கரிமுடக்கு கிராமங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலா வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வனங்களில் உள்ள விலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலா வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உதகை அருகே கெந்தொரை கிராமத்திலுள்ள கரி முடக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்புக இருகாட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகளை இரவு நேரத்தில் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் விவசாயப் பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் யானைகள் உள்ள இடத்தைக் கண்டறிந்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...