உதகை நகராட்சிக்குட்பட்ட கடைகளை முறைப்படுத்தும் பணிகள் தொடக்கம்

நீலகிரி : உதகை நகராட்சிக்கு உட்பட்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கடைளை அளந்து முறைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

நீலகிரி : உதகை நகராட்சிக்கு உட்பட்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கடைளை அளந்து முறைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

உதகை நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் இடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கான வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ள நிலையில், இன்று திடீரென வந்த நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கடைகளை அளவிட தொடங்கினார். இந்தக் கடைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எவ்வளவு அதிகம் கட்டப்பட்டுள்ளதோ அதற்கேற்றாற் போல வாடகை நிர்ணயிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதனிடையே, கடைகளை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளை முறையாக அளக்காமல், அதிகஅளவு இருப்பதாக கணக்கு காட்டி, கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இதனால், நகராட்சி ஊழியர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு முறையாக அளந்து உரிய அளவினை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டுமென நகராட்சி ஊழியர்களிடம் கடை உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு முறையாக அளக்கப்பட்டது. இப்பணிகள் நாளையும் நடக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் 

தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...