நீலகிரி : கூடலூர் அருகே நேற்று வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்த பின், வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத்துறை குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நீலகிரி : கூடலூர் அருகே நேற்று வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்த பின், வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத்துறை குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல், கைவட்ட பகுதியை சேர்ந்தவர் ராயின். இவரது வீட்டிற்குள் நேற்று 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை புகுந்து அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டது. இதன் உடம்பில் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும், உணவு உண்ணாமல் இருந்ததால் அதிக சோர்வுடன் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்தனர். மேலும், அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அதற்கு உணவு அளித்த வன ஊழியர்கள், தற்போது அதன் உடம்பில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும், சிகிச்சை முடிந்தபின் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த சிறுத்தையை கொண்டு சென்று விடப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல், கைவட்ட பகுதியை சேர்ந்தவர் ராயின். இவரது வீட்டிற்குள் நேற்று 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை புகுந்து அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டது. இதன் உடம்பில் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும், உணவு உண்ணாமல் இருந்ததால் அதிக சோர்வுடன் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்தனர். மேலும், அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான வனத் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அதற்கு உணவு அளித்த வன ஊழியர்கள், தற்போது அதன் உடம்பில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும், சிகிச்சை முடிந்தபின் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த சிறுத்தையை கொண்டு சென்று விடப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.