கோவை : விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருதையொட்டி, 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
கோவை : விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருதையொட்டி, 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார். நாளை காலை 7.20 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், விமான நிலையத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் இல்லத்திற்கு காரில் செல்கிறார். பின்னர், காலை 10 மணி அளவில் வையம்பாளையத்தில் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, நீலாம்பூர் அருகே உள்ள முதலிபாளையத்தில் பேரூர் சாந்தலிங்கர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, கருமத்தம்பட்டி அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு விமானம் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னை செல்கிறார்.
கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சரின் வருகையையொட்டி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் ஆகியோரின் உத்தரவின்பேரில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.