ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பணியிட மாற்றம் : திருப்பூரில் மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியருக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விட மறுத்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியருக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விட மறுத்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.



9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு எச்சரிக்கைகளைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை முடித்துக்கொண்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். 



இந்த நிலையில், திருப்பூர் வெள்ளியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்து வரும் சுரேஷ் என்பவரை பெரிச்சிபாளையம் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, உத்தரவு நகலை பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுரேசை, அவர்களது மாணவ, மாணவிகள் சூழ்ந்துகொண்டனர். பின்னர், கண்ணீர் மல்க அழுது, அவரை விடமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் சுரேசை பணிமாறுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தி சில மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...