கோவையில் சினிமா பாணியில் கவனத்தை திசை திருப்பி 24 பவுன் நகையைத் திருடிய கும்பலுக்கு வலை வீச்சு

கோவை : கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 1 -ம் தேதி முதல் நகைக் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான அரங்குகளில் புதிய வடிவங்களில் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கோவை : கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 1 -ம் தேதி முதல் நகைக் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான அரங்குகளில் புதிய வடிவங்களில் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சிக்கு நேற்று முன்தினம் மாலை 4 பெண்கள் உட்பட 6 பேர் வந்து ஒவ்வொரு அரங்காகச் சென்று பார்வையிட்டனர். அப்போது, இவர்களில் ஓர் ஆண், 2 பெண்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பினர். 



இதையடுத்து, மற்றொரு ஆணும், 2 பெண்களும் ஓர் அரங்கிற்குள் நுழைந்து, அங்கிருந்த நகைகளைப் பார்வையிட்டனர். அங்கிருந்த விற்பனையாளரிடம், பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளின் விலை குறித்து கேட்டனர். அதற்கு விற்பனையாளர் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் பெண் விற்பனையாளருக்குத் தெரியாமல், அங்கு வைக்கப்பட்ட 24 பவுன் தங்க நகையை திருடி, அருகேயிருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். 



அதைத் தொடர்ந்து, நகைகளை பிறகு வந்து வாங்குவதாக கூறிவிட்டு இவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற பின்னர், அந்த அரங்கில் இருந்த விற்பனையாளர் நகைகளைச் சரி பார்த்த போது 24 பவுன் நகை மாயமானது தெரிந்து, தனது நிறுவன மேலாளருக்கு தெரிவித்தார். நகை மாயமான சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கவனத்தை திசை திருப்பி, நகை விலை குறித்து கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் நகையைத் திருடிவிட்டு தப்பியது தெரிய வந்தது. முன்பாகவே, கண்காட்சி நடப்பது தெரிந்து, திட்டமிட்டு 2 ஆண்கள், 4 பெண்கள் ஒன்றாக வந்து கடை நிர்வாகியின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடிச் சென்றுள்ளனர். 

இந்த திருட்டு சம்பவத்தில், திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது தொடர்பாக நகை விற்பனை நிறுவனத்தின் மேலாளர் கவுரவ் சோனி அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...