கோவை : கோவை மண்டலம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் எனும் மையக்கருத்தில் மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.
கோவை : கோவை மண்டலம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் எனும் மையக்கருத்தில் மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாடு கோவை காந்திபுரம் அரசுப் பொருட்காட்சி மைதானத்தில், மாலை 4 மணிக்கு அரங்கேறியது. இதில், பி.எஸ்.உமர் ஃபாருக் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக தலைவர் ஷப்பீர் அஹ்மது தலைமை உரையாற்றினார். இதில், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஷப்பீர் அஹ்மது பேசுகையில், "தனிமனிதரின் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது தான் ஜனநாயகம். எந்த ஒரு மதத்தையும் ஏற்றுக் கொள்கின்ற, அதன் படி செயல்படுகின்ற உரிமையை அரசியல் சட்டம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வழங்கியுள்ளது. இந்த உரிமையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கூடாது.
எவ்விதமான பக்கம் சார்போ, பாகுபாடோ இல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும். எவர் மீதும் எவ்விதமான அக்கிரமமோ, கொடுமையோ, உரிமை பறிப்போ இழைக்கப்படக் கூடாது. மேலும், இந்தியாவின் மதசார்பற்ற தன்மை காக்கப்பட வேண்டும், என்றார்.
இந்த மாநாடு கோவை காந்திபுரம் அரசுப் பொருட்காட்சி மைதானத்தில், மாலை 4 மணிக்கு அரங்கேறியது. இதில், பி.எஸ்.உமர் ஃபாருக் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக தலைவர் ஷப்பீர் அஹ்மது தலைமை உரையாற்றினார். இதில், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஷப்பீர் அஹ்மது பேசுகையில், "தனிமனிதரின் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது தான் ஜனநாயகம். எந்த ஒரு மதத்தையும் ஏற்றுக் கொள்கின்ற, அதன் படி செயல்படுகின்ற உரிமையை அரசியல் சட்டம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வழங்கியுள்ளது. இந்த உரிமையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கூடாது.
எவ்விதமான பக்கம் சார்போ, பாகுபாடோ இல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும். எவர் மீதும் எவ்விதமான அக்கிரமமோ, கொடுமையோ, உரிமை பறிப்போ இழைக்கப்படக் கூடாது. மேலும், இந்தியாவின் மதசார்பற்ற தன்மை காக்கப்பட வேண்டும், என்றார்.